×

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி திமுகவினர் தீவிரமாக ஈடுபடவேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வருகின்ற 1.1.2024ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2023ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணிகள் 21.7.2023 வெள்ளி முதல் 21.8.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது.

இதில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2024ன்போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட 17.10.2023 முதல் 30.11.2023 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்யவோ, திருத்தங்கள் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6,6-பி,7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம்.

வாக்காளர் சேர்ப்பதற்கு www.voters.eci.gov.in மற்றும் https://voterportal.eci.gov.in என்ற இணைய தளத்திலும் மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில், காஞ்சிபுரம்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட திமுகவினர் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த பணியின் விவரத்தினை மாவட்ட திமுகவினர் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி திமுகவினர் தீவிரமாக ஈடுபடவேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Northern District ,Minister ,N. Moe Andarasan ,Kanchipuram ,Moe Andarasan ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...